'ஓம்' என்ற சொல்லே நம் உள்ளம் என்னும் திருக் கோவிலைத் திறக்க உதவும் ஒரே திறவுகோல்.அதற்கு மேல் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும், அந்தத் திருக்கோவிலினாற்றல் வளாகத்தை நமக்கு உணர்த்தும் ஒளிவிளக்குகள்.அதனால்தான், அனைத்து மந்திரங்களும் "ஓம்" என்ற ஒலியுடன் தொடங்குகிறது.
ஓம்.......என்ற ஒலி மூன்று படிகளை உடையது.
அதாவது, அகரம், உகரம், மகரம் என்ற ஒலி நிலைகள்.
பயிற்சியின்போது ஐந்து நிலைகளாக விரியும்.
அகரம் - விழிப்பு நிலை.
உகரம் - கனவு நிலை
மகரம் - உறக்க நிலை
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....என்ற தொடர் ஒலி , கனவற்ற உறக்கத்தை உணர்த்தும் துரிய நிலை.
தொடர் ஒலியின் இறுதில் ஏற்படும் அமைதி. தன் இழந்த சமாதி நிலை.. அதை துரியாதீத நிலை என்போம்.
ஆக , ஐந்து நிலைகள்.
0 comments:
Post a Comment