Saturday, August 15, 2009

ஆசியாவின் தாதா அலட்டுகிறது




சீன நாட்டு பத்திரிகை ஒன்றில் சீன நிபுணர் ஸாங் குவோ ஸான் லூ காங் என்பவர், ('If China takes a little action, the so-called Great Indian Federation can be broken up' (Zhong Guo Zhan Lue Gang, www.iiss.cn, Chinese, August 8, 2009). சீனா இந்தியாவின் பல சுயாட்சிக் குழுக்களுடன் சேர்ந்து அவர்களது தேசிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, இந்தியாவின் அண்டைநாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவை 20-25 நாடுகளாகத் துண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா என்பது ஒரு தேசமாக இருக்க முடியாதாம்.அதில் பல உள் குழுக்கள் நிறைந்துள்ளதாம்.இந்து மதம் என்பதே இந்தியாவை ஒரே தேசமாக வைத்திருக்கிறதாம்.இந்து மதம் சாதிபிரிவுகளை மக்களின் மேல் திணிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறதாம்.இந்திய ஆட்டின் மேல் சீன ஓநாய்க்கு கரிசனம்...

ஆசியாவின் தாதாவாக தன்னையே நியமித்துக்கொண்டுள்ள சீனா இந்தியாவில் உள்ள சுயாட்சி விரும்பும் குழுக்களில் அஸ்ஸாமியர்கள், தமிழர்கள் மற்றும் காஷ்மீரிகளின் தனிநாடு கோரிக்கைக்கு உதவி செய்து இந்தியாவை பிளக்க வேண்டுமாம்.மேலும் இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷுடன் சேர்ந்து கொண்டு வங்காளி உணர்வினைத் தூண்டி ஏக வங்காளம் என்ற முன்வடிவினையும் முன்வைத்திருக்கிறார்.

ஒரு புறம் உறவுக்கு கை நீட்டும் சீனா மறுபுறம் இதுபோன்ற அறிவு(?)ஜீவிகளை பேசவிட்டு ஆழம் பார்க்கிறதோ?


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger