Sunday, November 16, 2008

கடல் கடந்த `இந்து' சாம்ராஜ்யம்!

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை `இந்து" சாம்ராஜ்யம் காபூலில்இருந்து சிங்கபுரம் (தற்கால சிங்கப்பூர்) பரவியிருந்தது. பிற மதங்களின்படையெடுப்புகளினால் இந்து மதம் அழிக்கப்பட்டு, பெரும்பான்மையான மக்கள்வன்முறைகளினால் மதமாற்றம் செய்யப்பட்டனர். பர்மா, இந்தோனேஷியா,பிலிப்பைன்ஸ், கம்போடியா, தாய்லாந்து போன்ற கிழக்காசிய இந்துசாம்ராஜ்யத்தின் பகுதிகள் முகமதியர்களாலும், கிறிஸ்தவர்களாலும்மதமாற்றங்களின் மூலம் பங்கு போட்டுக் கொள்ளப்பட்டன.
இருப்பினும், இம்மக்கள் தங்களுடைய இந்துமத பழக்க வழக்கங்கள், பெயர்கள்ஆகியவற்றை விட்டுவிடவில்லை. முக்கியமாக, மதம் மாறிய இவர்கள், இந்து மதத்தைவெறுக்கவில்லை. இன்றும் ஸ்ரீமத் ராமாயணம் மற்ற மதத்தினரால்மதிக்கப்பட்டும், மரியாதையுடனும் போற்றப்பட்டு வருவதை இந்நாடுகளில்காணலாம். இன்றும் ஸ்ரீமத் ராமாயணம், நாட்டிய நாடகங்களாக இந்நாடுகளில்பிரபலமாக உள்ளன.

இந்தோனேஷியாவின் ரூபாய் நோட்டுகளில் வினை தீர்க்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும்காணலாம்.





புகழ்பெற்ற இந்தோனேஷிய முன்னாள் ஜனாதிபதியின் பெயர்மகாபாரதத்தின் மாவீரனான கர்ணனின் பெயர்தான். அவர் பெயர் சுகார்ணோ. அவரதுபெண்ணின் பெயர் மேகவதி.
இதற்கு மாறாக இந்தியாவில்தான் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்இந்துகளுடன் இணைந்து வாழாமல், தனிப்பிரிவுகளாகவே இருந்து வருகின்றனர்.மேலும், மேலும் மிகப்பெரிய அளவில் மதமாற்றங்களும் செய்து வருகின்றனர்.இதனை அரசாங்கமும், பல அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துவருகின்றன. இந்தியாவில் மட்டும்தான் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வோர் ஊரிலும்`சென்சிடிவ்' ஏரியா முஸ்லிம்கள் பகுதி, கிறிஸ்தவர்கள் பகுதி, இந்துக்கள்பகுதி என்று பிரிந்தே இருக்கின்றன. இது எந்த அளவிற்கு நாட்டின் நலனையும்பாதிக்கும் என்பது பகைவர்களால் நாட்டிற்கு ஆபத்து வரும்போது தெரியும்.பாரதம் அழிந்தால் எவர்தான் வாழ்வார்கள்? நாம் அனைவரும் பாரதத் தாயின்மக்கள். மதம் என்பது சொந்த விவகாரம். மக்களைப் பிரிப்பதற்கு மதம் ஒருகாரணமாக இருக்கக்கூடாது. நல்லபடி வாழ வேண்டும் என்றால் நாம் அனைவரும்இணைந்து வாழ வேண்டும். ``எனது மதம்தான் மதம்'' என்று கூறும் ஆணவம் இனிகூடாது. அவரவர்கள் விருப்பப்படி ஆண்டவனை வணங்கட்டும்.
இந்தியாவில் வாழ்ந்து, இந்தியாவின் நீரைப் பருகி, இந்தியாவின் உணவைஉண்டு பாரத்தாயின் கருணையில் குடும்பத்தையும், குழந்தைகைளயும்வளர்த்துக்கொண்டு, தாய்நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் அன்னிய நாடுகளிடம்பற்று வைப்பதை எவ்விதம் இறைவன் பொறுப்பான்?`சிறுபான்மையினர்'என்று அரசியல் கட்சித் தலைவர்களால் முத்திரையிடப்பட்டுள்ள முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் எத்தனை காலத்திற்குத்தான் ராணுவம், காவல்துறை ஆகியவற்றைநம்பி வாழவேண்டும்? பாரதத் தாயின் குழந்தைகளான இவர்கள் ஏன் இந்துக்களுடன்இணைந்து உடன்பிறந்தவர்களாக வாழக்கூடாது? இவர்கள் மூதாதையர்கள் அனைவரும்இந்துக்களாகப் பிறந்து, இந்துக்களாக வாழ்ந்து, இந்துக்களாகவேமடிந்தவர்கள்தான்! இதனை எவரும் மறந்துவிடக்கூடாது!


நன்றி : ஏ.எம்.ஆர். http://www.veeran.co.cc/

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger